சீமைக்கருவேல மரம் ஒழிப்பு கருத்தரங்கு

கடலாடியில் நேருயுவகேந்திரா மற்றும் இளைஞர் நற்பணி மன்றம் இணைந்து கருவேல மர ஒழிப்பு கருத்தரங்கை ஞாயிற்றுக்கிழமை நடத்தின.

கடலாடியில் நேருயுவகேந்திரா மற்றும் இளைஞர் நற்பணி மன்றம் இணைந்து கருவேல மர ஒழிப்பு கருத்தரங்கை ஞாயிற்றுக்கிழமை நடத்தின.
கருத்தரங்குக்கு ஒருங்கிணைப்பாளர் முத்துராஜா தலைமை வகித்தார். நற்பணி மன்ற நிர்வாகிகள் கூரியபிள்ளை, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கருப்பையா, முன்னாள் தபால்துறை உதவி கண்காணிப்பாளர் முனியசாமி, மாநில வணிக சங்க துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருத்தரங்கில் சீமைக் கருவேலமரம் ஒழிப்பு பற்றிய கருத்துகளை நேருயுவகேந்திரா மாவட்ட திட்ட உதவியாளர் சதீஷ் வழங்கினார். நிகழ்ச்சியில் கமுதி, கடலாடி, சிக்கல் பகுதி இளைஞர் குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் கடலாடி நேருயுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் தனலெட்சுமி நன்றி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com