கமுதி பகுதியில் அரசு மணல் குவாரிகளில் இருந்து முறையாக தார்பாய் மூடாமல் லாரிகளில் மணல் ஏற்றி செல்வதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
கமுதி அருகே முதுகுளத்தூர், கடலாடி பகுதியில் அரசு மணல் குவாரிகள் தற்போது இயங்கி வருகிறது. இங்கிருந்து நாள்தோறும் ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமாரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு 500-க்கும் மேற்பட்ட லாரிகளிலும் கமுதி, கடலாடி, முதுகுளத்தூர் பகுதிகளுக்கு லாரி மற்றும் டிராக்டர்களிலும் மணல் ஏற்றி சென்று விற்பனை செய்து வருகின்றனர். மணல் ஏற்றி செல்லும் லாரி, டிராக்டர்கள் தார்பாய் கொண்டு மூடாமல் செல்கின்றனர். இதனால் பின்னால் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. பெரும் விபத்து ஏற்படும் முன் வருவாய்த்துறை அதிகாரிகள் மணல் ஏற்றி செல்லும் டிராக்டர்கள், லாரிகளை மூடிச் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.