சம்பளம் வழங்கக் கோரி கமுதி வட்டார வளர்ச்சி அலுவலரை பொதுமக்கள் முற்றுகை

நூறு நாள் வேலைத் திட்டத்தில் 3 மாதங்களுக்கும் மேலாக சம்பளம் வழங்காததைக் கண்டித்து, கமுதி அருகே மரக்குளம் ஊராட்சிக்குள்பட்ட கிராம

நூறு நாள் வேலைத் திட்டத்தில் 3 மாதங்களுக்கும் மேலாக சம்பளம் வழங்காததைக் கண்டித்து, கமுதி அருகே மரக்குளம் ஊராட்சிக்குள்பட்ட கிராம மக்கள், கமுதி வட்டார வளர்ச்சி அலுவலரை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
   கமுதி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மரக்குளம் ஊராட்சியில் உள்ள மரக்குளம், சின்ன உடப்பங்குளம், கொத்தபூக்குளம் உள்ளிட்ட கிராமங்களில் நூறு நாள் வேலைத் திட்ட பயனாளிகளுக்கு, கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக ஊராட்சி நிர்வாகம் முறையாக சம்பளம் வழங்கவில்லையாம். மேலும், ஊராட்சி நிர்வாகம் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகக் கூறி, 200-க்கும் மேற்பட்டோர் கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தங்களது அடையாள அட்டையுடன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசனை முற்றுகையிட்டனர்.
    இதையடுத்து, பயனாளிகளுக்கு சம்பளம் முறையாக வழங்கப்படும் என அதிகாரிகள் உறுத்தியளித்ததை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
   இது குறித்து சின்ன உடப்பங்குளம் முன்னாள் திமுக ஒன்றியக் கவுன்சிலர் வாசுதேவன், மரக்குளம் அதிமுக செயலர் துரைராஜ் ஆகியோர் கூட்டாகக் கூறுகையில், மரக்குளம் ஊராட்சியில் அதிகாரிகளின் துணையோடு முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
  எனவே, அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சென்று மனு அளிக்க உள்ளோம் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com