ராமநாதபுரம் மாவட்டம், சிக்கல் அருகே கார் விபத்தில் வெள்ளிக்கிழமை இளைஞர் உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், காமராஜர்புரத்தைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் செந்தில்குமார் (30). இவர் தனது குடும்பத்தினருடன் காரில் ராமேசுவரத்திலிருந்து திருச்செந்தூர் கோயிலுக்குச் சென்றுள்ளனர். அப்போது, கடலாடி மேலச்செல்வனூர் பள்ளிவாசல் அருகே கார் வேகமாகச் சென்றதால், கட்டுப்பாட்டை இழந்து சாலையோர இரும்பு கம்பி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கீழச்செல்வனூர் போலீஸார், செல்வக்குமாரின் சடலத்தைக் கைப்பற்றி, கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து கார் ஓட்டுநர் மருதுமுத்து அளித்த புகாரின்பேரில், கடலாடி காவல் நிலைய ஆய்வாளர் முத்துராஜ் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.