இந்திய விமானப்படைக்கு ஆள்சேர்ப்பு முகாம் திருச்சியில் சனிக்கிழமை முதல் 23 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
ராமநாதபுரம் ஆட்சியர் எஸ்.நடராஜன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் சனிக்கிழமை (மே 20) முதல் 23 ஆம் தேதி வரை இந்திய விமானப்படைக்கு ஆள்கள் சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு 20 மற்றும் 21 ஆகிய இரு நாள்கள் தேர்வு நடைபெறும். முகாமில் அதிக அளவில் இளைஞர்கள் பங்கேற்று பயன்பெறுமாறும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.