வீட்டின் கதவை திறந்துவைத்து தூங்கிய தாய், மகளிடம்  நகை பறிப்பு

திருவாடானை அருகே வியாழக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தாய், மகளிடமிருந்து மர்ம நபர்கள் நகையை பறித்துச் சென்றுவிட்டனர்.

திருவாடானை அருகே வியாழக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தாய், மகளிடமிருந்து மர்ம நபர்கள் நகையை பறித்துச் சென்றுவிட்டனர்.
   கீழ்குடி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் மனைவி கவிதா (40). இவரது தாயார் செல்லம்மாள் (55). இவர்கள் இருவரும் வியாழக்கிழமை இரவு காற்றுக்காக வீட்டின் கதவைத் திறந்துவைத்து தூங்கிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், அவர்கள் இருவரும் அணிந்திருந்த தலா 7 பவுன் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிவிட்டனராம்.    இது குறித்து கவிதா அளித்த புகாரின்பேரில், தொண்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com