சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டத்தில் வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தியில், 196 மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு உத்தரவுகள் வழங்கப்பட்டன.
தேவகோட்டை வட்டத்துக்கான ஜமாபந்தி நிகழ்ச்சி, தேவகோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 10 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதற்கு, சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ தலைமை வகித்தார். ஜமாபந்தி நிகழ்ச்சியில் பெறப்பட்ட 196 மனுக்கள் பரீசிலிக்கப்பட்டு, அனுமதிக்கப்பட்ட மனுக்களுக்கான உத்தரவுகளை சிவகங்கை மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ ஜமாபந்தியின் இறுதி நாளில் வழங்கினார். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.