ராமநாதபுரத்தில் மே 23 இல் மின்தடை

ராமநாதபுரம் பகுதி துணை மின் நிலையங்களில் மே 23 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.

ராமநாதபுரம் பகுதி துணை மின் நிலையங்களில் மே 23 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.
இது தொடர்பாக மின்வாரிய உதவிச் செயற்பொறியாளர் ஜி. கெங்காதரன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஆர்.எஸ்.மடை துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும், ராமநாதபுரம் நகராட்சிப் பகுதிகள், கேணிக்கரை, சக்கரக்கோட்டை, பாரதி நகர், ஆட்சியர் அலுவலக வளாகம், பட்டினம்காத்தான், சின்னக்கடை, அச்சுந்தன்வயல்.
ராமநாதபுரம் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும், திருப்புல்லாணி, தெற்குத்தரவை, எம்.எஸ்.கே. நகர், பசும்பொன் நகர், கூரியூர், காஞ்சிரங்குடி, புத்தேந்தல், வன்னிக்குடி.
ரெகுநாதபுரம் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும்,
ரெகுநாதபுரம், பெரியபட்டினம், முத்துப்பேட்டை, காரான், வண்ணான்குண்டு, தினைக்குளம், உத்தரவை, சேதுக்கரை, தெற்கு காட்டூர், நைனா மரைக்கான்.
தேவிபட்டினம் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும், தேவிபட்டினம், காட்டூரணி, அண்ணா பல்கலைக்கழகம், பொட்டகவயல்,திருப்பாலைக்குடி, சிறுவயல், பெருவயல், சித்தார்கோட்டை.
ஆர்.காவனூர் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும்,
முதலூர், கிளியூர், தொருவளூர், ஆர்.காவனூர், குளத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com