சாயல்குடி அருகே விவசாயி கொலை: 2 பேர் கைது

சாயல்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீஸார் 2 பேரை கைது செய்துள்ளனர்.

சாயல்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீஸார் 2 பேரை கைது செய்துள்ளனர்.
சாயல்குடி அருகே மலட்டாறு விலக்குச் சாலையில் அரசு மதுக்கடை உள்ளது. இங்கு மது அருந்திக் கொண்டிருந்தவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இதில், சாயல்குடி அருகே சாத்தங்குடி கிராமத்தை சேர்ந்த விவசாயியான கிருஷ்ணன் மகன் திருப்பதி(40)யை சிலர்  கம்பால் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 சம்பவம் தொடர்பாக சாயல்குடி காவல் நிலைய ஆய்வாளர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து அதே ஊரைச் சேர்ந்த மோகன் மற்றும் பசும்பொன் லிங்கம் என்ற இருவரையும் கைது செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com