குடிநீர் பிரச்னை: நூதன போராட்டம்

குடிநீர் பிரச்னையைத் தீர்க்கக் கோரி ராமநாதபுரத்தில் தமிழர் தேசிய முன்னணி யினர்மாட்டிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.

குடிநீர் பிரச்னையைத் தீர்க்கக் கோரி ராமநாதபுரத்தில் தமிழர் தேசிய முன்னணி யினர்மாட்டிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.
  ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் பிரச்னையத் தீர்க்கக் கோரியும், இதில் மெத்தனப் போக்கை கடைப்பிடிக்கும் குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் செவ்வாய்க்கிழமை ராமநாதபுரம் பாரதிநகர் பேருந்து நிறுத்தம் முன்பு தமிழர் தேசிய முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் க.நாகேஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சி.பசுமலை, மாநில பொதுச் செயலாளர் கண்.இளங்கோ, நகர் செயலாளர் செய்யது சேக் அப்துல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பசு மாட்டிடம் மனு கொடுத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com