திருவாடானை அரசு கல்லூரியில் விண்ணப்பிக்க மே 26 கடைசி நாள்

திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க மே 26 கடைசிநாள் என கல்லூரி முதல்வர் அறிவித்துள்ளார்.

திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க மே 26 கடைசிநாள் என கல்லூரி முதல்வர் அறிவித்துள்ளார்.
கல்லூரி முதல்வர் தமிழ்செல்வி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மூன்று ஆண்டுகளுக்கு முன் தொடக்கப்பட்டது. இருபாலர் படிக்கும் இக்கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு தமிழ், ஆங்கிலம், வணிகவியல், கணினிஇயல், கணிதம் ஆகிய படிப்பிற்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
அனைத்திற்கும் விண்ணப்பிக்க வருகிற மே மாதம் 26ம் தேதி கடைசி நாளாகும். வணிகவியல், கணினிஇயல், கணிதத்திற்கு ஜூன் 15-ஆம் தேதி தேதியும், தமிழ், ஆங்கிலம் பாடங்களுக்கு ஜூன் 16-ஆம் தேதியும் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com