திருவாடானை அருகே தனியார் நூற்பாலையில் வேலைபார்த்து வந்த வெளி மாநில இளைஞர் திடீரென உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
திருவாடானை அருகே உள்ள சி.கே.மங்கலம் தனியார் நூற்பாலையில் மேற்பார்வையாளராக, மத்தியபிரதேச மாநிலம் கிர்பான் கிராமத்தைச் சேர்ந்த சோட்லால் படேல் மகன் சுரேந்தர் படேல் (23) வேலை பார்த்துவந்துள்ளார். இவர் கடந்த சில நாள்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்துவந்தாராம். இந்நிலையில், அவர் வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தார். இது குறித்து அதே ஆலையில் பணிபுரியும் மத்திய பிரதேச மாநிலம் கோசங்காபாத் மாவட்டம் பாபேய் கிராமத்தைச் சேர்ந்த ராமேஸ்வர் மகன் ஹேமந்தமீனா(23) அளித்தப் புகாரின்பேரில் திருவாடானை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.