மீன்பிடி தடைக்காலம் காரணமாக மீன்கள் விலை உயர்ந்துள்ளன.
திருவாடானை அருகே தொண்டி, நம்புதாளை, சோழியக்குடி, எம்ஆர் பட்டினம் கடற்கரை பகுதிகளில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. ஆகையால் மீன் வரத்துக் குறைவாக இருப்பதால், மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை முரல் மீன் கிலோ ரூ.450-க்கும், நண்டு கிலோ ரூ.500 -க்கும், வெள மீன் கிலோ ரூ. 400-க்கும், செங்கனி மீன் கிலோ ரூ.400-க்கும் விற்பனையானது. இதனால் மீன் பிரியர்கள் மிகவும் வேதனைப்பட்டனர். அதே சமயம் மீன்கள் அதிக கிராக்கியாக விற்கப்பட்டதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.