முள்புதரில் வீசப்பட்ட பெண் குழந்தை மீட்பு

ராமநாதபுரம் அருகே வெள்ளிக்கிழமை முள்புதரில் இருந்து பச்சிளம் பெண் குழந்தை மீட்கப்பட்டது.

ராமநாதபுரம் அருகே வெள்ளிக்கிழமை முள்புதரில் இருந்து பச்சிளம் பெண் குழந்தை மீட்கப்பட்டது.
 ராமநாதபுரம் அருகே நயினார்கோயில் சாலையில் முக்குடிச்சாலை கிராமத்தில் முள்புதரில் பச்சிளம் பெண் குழந்தை அழுதபடி கிடந்துள்ளது. அதைப் பார்த்த அப்பகுதியினர் 108 ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு தகவல் தெரிவித்தனர். அந்த குழந்தை பிறந்து ஒரு சில நாள்களே ஆகியிருக்கக்கூடும் என தெரிந்தது. மேலும் குழந்தை எறும்புகள் கடித்த நிலையில் இருந்தது. இதையடுத்து குழந்தையை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வாகனத்தில் அனுப்பினர். இதையடுத்து ஆம்புலன்ஸ் வாகன ஊழியர்கள் அக்குழந்தைக்கு முதலுதவி அளித்து குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியிடம் ஒப்படைத்தனர். ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் பாதுகாப்புத்துறை அதிகாரியின் பொறுப்பில் குழந்தை பராமரிக்கப்பட்டு வருகிறது. குழந்தையை காணவில்லை எனத் தேடும் அதன் பெற்றோர்கள் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியின் செல்லிடப்பேசி எண் 9445223121-க்கு தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
   இதுகுறித்து நயினார்கோவில் போலீஸார் வழக்குப் பதிந்து குழந்தையின் தாய் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com