தேவகோட்டையில் வியாழக்கிழமை கண்தான விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றன.
தேவகோட்டை பெத்தாள் ஆச்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் தேவகோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கண் தான விழிப்புணர்வு தொடர்பாக பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி மற்றும் கவிதை போட்டி நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற விழாவில் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவியருக்கு மருத்துவர் செந்தில்குமார், அறக்கட்டளை நிர்வாகி அருணாசலம் ஆகியோர் பங்கேற்று பரிசுகளை அளித்தனர். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனர்.