பள்ளிகளுக்கிடையே அறிவியல் கண்காட்சிப் போட்டி

முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், குறுவள மைய அளவில் பள்ளிகளுக்கிடையேயான அறிவியல் கண்காட்சிப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், குறுவள மைய அளவில் பள்ளிகளுக்கிடையேயான அறிவியல் கண்காட்சிப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.
இப்போட்டியில், முதுகுளத்தூர் ஒன்றியத்துக்குள்பட்ட 12 பள்ளிகளின் மாணவர்கள் பங்கேற்றனர். போட்டிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியை மேக்டலின் மேகலா தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் தர்மராஜ், பட்டதாரி ஆசிரியர்கள் ஆரோக்கிய பன்னீர்செல்வம், தனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டிக்கு நடுவராக, ஆசிரியப் பயிற்றுநர் அலிமா செயல்பட்டார். 
இதில், தொடக்கப் பள்ளி அளவில் எம். தூரி பள்ளி முதல் பரிசையும், முதுகுளத்தூர் பள்ளிவாசல் பள்ளி இரண்டாம் பரிசையும், மேலப்பண்ணைக்குளம் பள்ளி மூன்றாவது பரிசையும் பெற்றன.
தொடக்கப் பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற அறிவியல் கண்காட்சிப் போட்டியில் சிறந்த பள்ளிக்கான பரிசை, எம்.தூரி ஊராட்சி ஒன்றியப் பள்ளித் தலைமை ஆசிரியர் காளிமுத்து பெற்றார். உயர்நிலைப் பள்ளி அளவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சிப் போட்டியில், முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி முதல் பரிசையும், செல்வநாயகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி இரண்டாவது பரிசையும், முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி மூன்றாவது பரிசையும் பெற்றன. உயர்நிலைப் பள்ளிகளுக்கிடையிலான போட்டியில் சிறந்த பள்ளிக்கான பரிசு, செல்வநாயகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வழங்கப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com