திருவாடானை அருகே சேதமடைந்துள்ள பெருவாக்கோட்டை-அரசத்தூர் சாலையை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாடானை அருகே பெருவாக்கோட்டை - அரசத்தூர் பகுதியில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த சாலை வழியாக அரசத்தூர், கெங்கைவிலாசம், கட்டிமங்கலம், வலையனேந்தல் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லலாம். மேலும் இந்த வழியாக தான் திருவாடானை, தொண்டி, பாண்டுகுடி ஆகிய அரசு மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டும். எனவே பல்வேறு தரப்பினரும் பயன்படுத்தி வரும் பெருவாக்கோட்டை - அரசத்தூர் சாலையில் கடந்த ஆண்டு சாலை அமைப்பதற்கான முதற்கட்டப் பணிகள் நடைபெற்றது. அதன் பின்னர் ஏனைய பணிகளை தொடங்காமல் கைவிட்டதால், தற்போது அந்த சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகினறனர். எனவே மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.