திருவாடானை தாலுகா முழுதும்உரக்கடைகளில் ரூ.5கோடிக்கு மேல் உரம் தேங்கியுள்ளதாகவியாபாரிகள் தெரிவித்தனர்.
திருவாடானை,தொண்டி,ஆர்.எஸ்.மங்கலம்,பாண்டுகுடி,மங்கலக்குடி,எஸ் பி பட்டினம் போன்ற பகுதிகள் சுமார் 25-க்கும் மேற்பட்ட உரக்கடைகள் உள்ளன. இதன் மூலம் இப்பகுதி விவசாயிகள் தங்களுடைய நிலங்களுக்கு உரம் போடுவது வழக்கம்.அதே போல் இந்த ஆண்டும் கடந்த மாதம் பெய்த மழையை நம்பி விவசாயிகள் நெல் விவசாயம் செய்து பயிர்கள் நன்கு வளர்ந்து உரம் போடும் தருவாயில் உள்ளது.இந்நிலையில் இந்த ஆண்டும் எதிர்பார்த்த மழை இல்லாததால் விவசாயிகள் உரம் வாங்காமல் இருக்கின்றனர். இதனால் உரக்கடைகளில் ரூ.5கோடிக்கு மேல் இருப்பு உள்ளதாக வியாபாரிகள் கவலையுடன் தெரிவித்தனர்.