ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்

கச்சத்தீவு அருகே செவ்வாய்க்கிழமை மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி, அவர்களது வலைகள், மீன்பிடி உபகரணங்களை கடல் வீசிச் சென்றனர்.

கச்சத்தீவு அருகே செவ்வாய்க்கிழமை மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி, அவர்களது வலைகள், மீன்பிடி உபகரணங்களை கடல் வீசிச் சென்றனர்.
  ராமநாதபுரம் மாவட்டம்,  ராமேசுவரத்தில் இருந்து திங்கள்கிழமை காலை 429 விசைப்படகுகளில் மீன்வளத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். செவ்வாய்கிழமை அதிகாலை கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது,  அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
  மேலும் 20-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை வெட்டி கடலில் வீசி சென்றதாக மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com