இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

கச்சத்தீவு அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும்

கச்சத்தீவு அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும்  தாக்குதல் நடத்தியும், 20-க்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த வலைகள், மீன்பிடி உபகரணங்களை வெட்டி கடலில் வீசினர்.
இதனால் படகு ஒன்றுக்கு 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை இழப்புடன் கரை திரும்பினர். கடலில் நடந்த சம்பவம் குறித்து மீனவ சங்கத் தலைவர்கள் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். 
இது குறித்து மீனவ சங்கத் தலைவர் தேவதாஸ் கூறியது:
 இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதல் மற்றும் சிறைபிடிப்பு சம்பவத்தால் மீன்பிடித் தொழில் அழிந்து வருகிறது. மேலும் மத்திய அரசின் அலட்சிப் போக்கால் தான் இலங்கை அரசு அத்துமீறி செயல்பட்டு வருகிறது. இலங்கையில் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com