பரமக்குடியில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுகள் சங்கம் சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் மெளலானா அபுல்கலாம் ஆசாத், முன்னாள் பாரத பிரதமர்கள் ஜவாஹர்லால் நேரு, இந்திராகாந்தி ஆகியோரின் பிறந்தநாள் நிகழ்ச்சி என முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.ஐ.ஏ. ஹாரிஸ் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஆர். சண்முகசுந்தரம், செயலாளர் எஸ். திசைநாதன், பொருளாளர் பொன்.பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ்.கே. மைதீன் வரவேற்றார்.
திமுக இளைஞரணி முன்னாள் ஒன்றியச் செயலாளர் பெரி.துரைராஜ், எம். புர்கான் அலி, ஏ. சாகுல்ஹமீது ஆகியோர் தலைவர்களின் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மெளலான அபுல்கலாம் ஆசாத், ஜவாஹர்லால் நேரு, இந்திராகாந்தி ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று நூல்களை பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கே.கே. காசிலிங்கம் வழங்கினார். விழாவில் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.