கமுதி நாராயணபுரம் ஊராட்சியில் துப்புரவு பணிகள்

கமுதி ஒன்றியம் நாராயணபுரம் ஊராட்சி மற்றும் தூய்மை பாரதம் இயக்கம் சார்பில், அப்பகுதியில் வியாழக்கிழமை பொதுமக்கள் துப்பரவு பணியில் ஈடுபட்டனர்.

கமுதி ஒன்றியம் நாராயணபுரம் ஊராட்சி மற்றும் தூய்மை பாரதம் இயக்கம் சார்பில், அப்பகுதியில் வியாழக்கிழமை பொதுமக்கள் துப்பரவு பணியில் ஈடுபட்டனர்.
      தூய்மை பாரத இயக்கம் சார்பில், நாராயணபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம், ஜக்கம்மா கோயில், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மற்றும் முக்கிய தெருக்கள் உள்ளிட்ட பகுதிகளில் துப்பரவுப் பணிகள் நடைபெற்றன.
    கமுதி ஊராட்சி ஒன்றிய ஆணையர்  ரவி (கிராம ஊராட்சி) தலைமையில், ஊராட்சி செயலர் வேல்முருகன் முன்னிலையில் நடைபெற்ற இப்பணியில், நாராயணபுரம் கிராமப் பொதுமக்கள், துப்புரவுப் பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com