ராமேசுவரம் மீனவர்கள் 12 பேருக்கு வரும் 24-ஆம் தேதி வரை சிறைக்காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.
ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் 12-ஆம் தேதி மீன்பிடிக்க சென்ற 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். இவர்களை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், மூன்றாவது முறையாக செவ்வாய்க்கிழமை அவர்கள் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எம்.ரியால், 12 பேருக்குமான சிறைக்காவலை வரும் 24-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இதனையடுத்து 12 பேரும் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காவல் நீட்டிப்பு செய்யப்பட்டள்ளது உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.