ராமநாதபுரத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி மூளைக்காய்ச்சல் காரணமாக புதன்கிழமை உயிரிழந்தார்.
ராமநாதபுரம் பட்டணம் காத்தான் பகுதியை சேர்ந்த ஏக்நாத் மற்றும் அன்னபூர்ணா தம்பதியரின் ஒரே மகள் ஹர்ஷவர்த்தனா(10). இவர் ராமநாதபுரத்தில் தனியார் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த ஒரு வாரமாக மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மதுரையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் புதன்கிழமை உயிரிழந்தார்.
சிறந்த விளையாட்டு வீராங்கனையாக இருந்து வந்த இச்சிறுமி பல்வேறு பதக்கங்களையும் பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.