மதுபானக் கடை திறக்க கிராம மக்கள் எதிர்ப்பு

திருவாடானை அருகே அடுத்தகுடி கிராமத்தில், அரசு மதுபானக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.

திருவாடானை அருகே அடுத்தகுடி கிராமத்தில், அரசு மதுபானக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.
    இக் கிராமத்தில் சில நாள்களுக்கு முன் அரசு மதுபானக் கடை திறக்க முற்பட்ட போது, இப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். பின்னர், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கடை திறப்பு கைவிடப்பட்டது.
    இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அரசு மதுபானக் கடையை மீண்டும் திறக்க முற்பட்டனர். அப்போது, எதிரிப்பு தெரிவித்து பொதுமக்கள் கடை முன் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அரசு அதிகாரிகள், காவல் துறையினர் பேச்சுவார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com