ராமேசுவரத்தில் மகாராஷ்டிராவில் இருந்து கொண்டு வரப்பட்ட ஐந்து தலையுடன் கூடிய மகா சிவன் சிலையை பொதுமக்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
அலங்கரிக்கப்பட்ட லாரியில் இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் இந்த சிலை கொண்டு செல்லப்படுகிறது.
இந்த லாரி வெள்ளிக்கிழமை ராமேசுவரம் வந்தடைந்தது. இதனை பொதுமக்கள் பார்த்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இரவு நேரத்தில் மின் ஒளி அலங்காரத்தில் ஒளிரும் சிவன் சிலையை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.