ராமநாதபுரத்தில் 'நீட்' தேர்வுக்கு ஆதரவு தெரிவித்து பாஜகவினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் அரண்மனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பாஜக ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் கே.என்.முரளீதரன் தலைமை வகித்தார். ராமநாதபுரம் சட்டப் பேரவைத்தொகுதி பொறுப்பாளர் துரை.கண்ணன், தமிழ் வளர்ச்சிப்பிரிவு மாநில துணைத் தலைவர் வைகிங். எம்.எஸ்.கருணாநிதி, கோட்டப் பொறுப்பாளர் சண்முகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 'நீட்' தேர்வுக்கு ஆதரவு தெரிவித்தும், திமுக 'நீட்' தேர்வுக்கு எதிராக பிரசாரம் செய்து வருவதைக் கண்டித்தும் கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் ஜி.குமார்,மாவட்ட பொதுச்செயலாளர் கார்மேகம், மாவட்ட இளைஞரணித் தலைவர் ஆர்.மணிமாறன், மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜ்,மாவட்ட துணைத் தலைவர் காந்தி ஆகியோர் உள்பட பலரும் கலந்து கொண்டனர். கட்சியின் தேசிய மகளிரணி பொதுச்செயலாளர் விக்டோரியா கௌரி, எஸ்.சி. பிரிவு அணியின் மாநில பொறுப்பாளர் வெற்றிவேல் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.