பரமக்குடி அருகே சனிக்கிழமை வயல்வெளியில் அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியை மிதித்த விவசாயி உயிரிழந்தார்.
அரியனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த முத்து மகன் கோவிந்தன் (70). விவசாயியான இவர், ஊர் அருகே பூங்கா நகர் காலனி பகுதியில் உள்ள தென்னந்தோப்புக்குச் செல்வதற்காக வயல்வெளியில் நடந்து சென்றுள்ளார். அப்போது, அவ்வழியில் துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த மின்வயரை மிதித்துவிட்டார். இதனால், அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தாலுகா காவல் நிலையத்தில் அவரது மகன் குணசேகரன் (48) அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.