தொண்டி அரசு தொடக்கப் பள்ளிக்கு தேசிய விருது

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு தேசிய அளவிலான புரஸ்கர் விருது கிடைத்திருப்பதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு தேசிய அளவிலான புரஸ்கர் விருது கிடைத்திருப்பதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி தெரிவித்தார்.
    இது குறித்து அவர் புதன்கிழமை செய்தியாளர்களிடம் மேலும் கூறியது: அரசுப்பள்ளிகளின் தூய்மை, சுகாதாரம், கழிப்பறை வசதி, சுற்றுப்புறத் தூய்மை மற்றும் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியரின் தூய்மை ஆகியன அனைத்துப் பள்ளிகளிலும் ஆண்டு தோறும் ஆய்வு செய்யப்படும். இதில் தமிழக அளவில் வெற்றி பெறும் பள்ளிகளுக்கு மத்திய அரசின் புரோஸ்கார் விருது வழங்கப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த தொண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு புரஸ்கர் விருது கிடைத்துள்ளது. சென்னையில் இம்மாதம் 22 -ஆம் தேதி நடைபெறும் விழாவில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியை சாந்தியிடம் விருது வழங்கப்பட உள்ளது என அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com