மாடுகள் திருடிய 4 பேர் கைது

திருவாடானை வட்டம், எஸ்.பி.பட்டினம் அருகே உள்ள பாசிபட்டினத்தில் மாடுகள் திருடியதாக 4 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவாடானை வட்டம், எஸ்.பி.பட்டினம் அருகே உள்ள பாசிபட்டினத்தில் மாடுகள் திருடியதாக 4 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 பாசிபட்டினத்தைச் சேர்ந்தவர் முத்துவேலு (50). இவருக்கு சொந்தான இரண்டு பசுமாடுகள் திருடுபோனதைத் தொடர்ந்து, இதுகுறித்து எஸ்.பி.பட்டினம் போலீஸில் முத்துவேலு புகார் அளித்தார். இந்நிலையில், முத்துவேலுவுக்கு சொந்தமான மாடுகள், ஓரியூர் அருகே வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸார் அங்கு சென்று மாடுகளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, ஓரியூரை சேர்ந்த விஜயகாந்த (29), பனிச்சகுடியைச் சேர்ந்த கருணாநிதி (38), மாணவநகரியைச் சேர்ந்த சோனையன் (61), பாகனூரைச் சேர்ந்த அஜீத் (21)ஆகிய நான்கு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com