வெள்ளையாபுரத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

கமுதியை அடுத்த வெள்ளையாபுரத்தில் சனிக்கிழமை அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

கமுதியை அடுத்த வெள்ளையாபுரத்தில் சனிக்கிழமை அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
 தேவேந்திர இளைஞர் எழுச்சி பேரவை சார்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு அப்பேரவையின் நிறுவனர் தளபதி ராஜ்குமார் தலைமை வகித்தார். இதில், கமுதி-சாயல்குடி சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 
 விழாவில், கமுதி ஒன்றிய செயலர் சி.தர்மலிங்கம், ஒன்றிய தலைவர் ராமமூர்த்தி, நகரத் தலைவர் முனியசாமி, நகர செயலர் பாலா, ஒன்றியத் துணைத்தலைவர் மாயழகு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com