கடலாடி அருகே மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் கைது

கடலாடி அருகே மனைவியை வெட்டிக் கொலை செய்ய முயன்ற கணவரை, போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

கடலாடி அருகே மனைவியை வெட்டிக் கொலை செய்ய முயன்ற கணவரை, போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
      ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே  ஏ.புனவாசலைச் சேர்ந்தவர் முருகன் (35). இவரது மனைவி முத்துமாரி (35). இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், கடந்த ஓராண்டாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். 
    முத்துமாரி தனது தந்தை ஊரான நரசிங்கக்கூட்டத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், முருகன் வியாழக்கிழமை அங்கு சென்று மனைவி முத்துமாரியுடன் தகராறு செய்துள்ளார். அப்போது, முருகன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மனைவியை வெட்டியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.     இது குறித்து முத்துமாரி கடலாடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், காவல் ஆய்வாளர் முத்துராஜ் வழக்குப் பதிவு செய்து, முருகனை கைது செய்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com