ராமநாதபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏப்ரல் 21 ஆம் தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும் என, மின்வாரிய உதவிச் செயற்பொறியாளர் ஜி. கெங்காதரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆர்.எஸ்.மடை துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் ராமநாதபுரம் நகராட்சிப் பகுதிகள், கேணிக்கரை, சக்கரக்கோட்டை, பாரதி நகர், ஆட்சியர் அலுவலகம், பட்டணம்காத்தான்,சின்னக்கடை, அச்சுந்தன்வயல், செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி ஆகிய பகுதிகள்.
ராமநாதபுரம் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் திருப்புல்லாணி, தெற்குத்தரவை, எம்.எஸ்.கே. நகர், பசும்பொன் நகர், கூரியூர், காஞ்சிரங்குடி, புத்தேந்தல், வன்னிக்குடி.
ரெகுநாதபுரம் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் ரெகுநாதபுரம், பெரியபட்டினம், காரான், முத்துப் பேட்டை, வண்ணான்குண்டு, தினைக்குளம், உத்தரவை, சேதுக்கரை, தெற்கு காட்டூர், நைனா மரைக்கான் பகுதிகள்.
தேவிப்பட்டினம் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் தேவிப்பட்டினம், காட்டூரணி, அண்ணா பல்கலைக்கழகம், பொட்டக வயல், திருப்பாலைக்குடி, சிறுவயல், பெருவயல்,சித்தார்கோட்டை பகுதிகள்.
ஆர்.காவனூர் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் முதலூர், கிளியூர், ஆர்.காவனூர், தொருவளூர், குளத்தூர், தேத்தாங்கால் ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.