திருவாடானை அருகே ஆர்எஸ் மங்கலத்தில் ஏசு கண்மணிகள் மாநாடு நடைபெற்றது.
இதில் சிவகங்கை மறைமாவட்ட ஆயர் சுசை மாணிக்கம் தலைமை வகித்தார். சிவகங்கை மறைமாவட்ட முதன்மை குரு ஜோசப் லூர்து ராஜா,ஆர் எஸ் மங்கலம் மறை மாவட்ட அதிபர் ஜார்ஜ் கிளைமன்ட் ராஜா,மறை பணி இயக்குநர் ஆரோக்கியசாமி,திண்டிவனம் பங்கு தந்தை ஜார்ஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமான குழந்தைகள் கலந்து கொண்டனர். விவாலியே என்னும் பைபிள் சம்பந்தபட்ட போட்டிகள் நடைபெற்றன. கேள்வி கேட்பது, ஓவியம் கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தபட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டன.