ஓமன் நாட்டில் மீன் பிடித்தபோது விபத்தில் உயிரிழந்த தொண்டி மீனவர் உடலை கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாடானை தாலுகா தொண்டி அருகேயுள்ள புதுக்குடியைச் சேர்ந்தவர் காட்டுமந்திரி (30). கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஓமன் நாட்டிற்கு மீன் பிடி தொழிலுக்காக சென்றுள்ளார். இவர் கடந்த திங்கள்கிழமை ஓமன் நாட்டு கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது படகில் இருந்த சிலிண்டர் வெடித்து உயிரிழந்தார். அவரது உடலை ஓமன் நாட்டு அரசு தேடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் காட்டுமந்திரியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.