கச்சத்தீவு திருவிழாவுக்கு நாட்டுப்படகில் பாதுகாப்பாக செல்ல முடியுமா? மீன் வளத்துறை அதிகாரிகள் ஆய்வு

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு நாட்டுப் படகில் பாதுகாப்புடன் செல்ல முடியுமா என்பது குறித்து ராமேசுவரத்தில் மீன் வளத்துறை அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனர்.

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு நாட்டுப் படகில் பாதுகாப்புடன் செல்ல முடியுமா என்பது குறித்து ராமேசுவரத்தில் மீன் வளத்துறை அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனர்.
 கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா வரும் 23,24 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள விசைப் படகுகளில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், பாரம்பரிய மீனவர்கள் நாட்டுப் படகில் செல்ல அனுமதி கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 
மேலும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சித் தலைவர்கள் இது தொடர்பாக மீன்வளத்துறை அமைச்சர், மீன்வளத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர். 
இந்நிலையில், தூத்துக்குடி மீன்வளத்துறை கல்லூரி உதவி பேராசிரியர் வேல்முருகன், மீன் வளத்துறை இணை இயக்குநர் அமல்சேவியர், துணை இயக்குநர் ஐசக் ஜெயக்குமார், உதவி இயக்குநர் மணிகண்டன் மற்றும் அதிகாரிகள் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்திற்கு புதன்கிழமை வந்தனர். அவர்கள் நாட்டுப்படகில் பயணம் செய்து திருவிழாவிற்கு பாதுகாப்புடன் 
செல்ல வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு குறித்து செய்தியாளர்களிடம் அவர்கள் எதுவும் தெரிவிக்க மறுத்து விட்டனர். இந்த ஆண்டு கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்திற்கு பாரம்பரிய முறையில் நாட்டுப் படகில் செல்ல முடியுமா என்பது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் விரைவில் தெரிவிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com