சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது வாரிசுதாரர்களுக்கான குறை தீர்க்கும் கூட்டம் ராமநாதபுரத்தில் பிப். 19 ஆம் தேதி நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது வாரிசுதாரர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் பிப். 19 ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இதில் மாவட்டத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது வாரிசுதாரர்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக அளித்து தீர்வு காணலாம்.