பரமக்குடி வ.உ.சி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 30-வது விளையாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு பள்ளி கல்விக்குழு தலைவர் எஸ்.ராஜகோபால் தலைமை வகித்தார். காப்பீட்டு நிறுவன அலுவலர் டி.ஜெகப்பெருமாள், வழக்குரைஞர் பி.ஜி.நீலமணிவாசகம், ஜி.ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தாளாளர் எம்.எஸ்.சுந்தரேசன், பொருளாளர் ஆர்.எஸ்.ரவிச்சந்திரன், நிர்வாக உறுப்பினர் என்.மீனாட்சிசுந்தரம் தேசியக் கொடியினை ஏற்றினார். முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் எஸ்வி.சுப்பையா ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி போட்டியினை துவக்கி வைத்தார். பள்ளி நிர்வாக இயக்குநர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் விளையாட்டு அறிக்கையினை வாசித்தார். பள்ளியின் முதல்வர் பி.மகாதேவன் வரவேற்றார்.துணை முதல்வர் பிரேமா நன்றி கூறினார்.