ராமநாதபுரம் அருகேயுள்ள ரெகுநாதபுரம் கூட்டுறவுச் சங்க நியாய விலைக்கடையில் சனிக்கிழமை குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்கு ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் பி.ஜெயஜோதி தலைமை வகித்து குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினார். துணைத் தலைவர் நாகநாதன் முன்னிலை வகித்தார்.
விழாவில் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் எஸ்.சௌந்தர்ராஜன், மாணிக்கம், குலாம் முகம்மது உள்பட கூட்டுறவு வங்கி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 342 பேருக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டன.