பேருந்து கட்டணம் உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி

ராமேசுவரத்தில் இருந்து இயக்கப்படும் அரசு பேருந்துகளில் ரூ. 50 முதல் ரூ. 200 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ராமேசுவரத்தில் இருந்து இயக்கப்படும் அரசு பேருந்துகளில் ரூ. 50 முதல் ரூ. 200 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ராமேசுவரத்தில் தனியார் பேருந்துகள் இல்லாத நிலையில், அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. ராமேசுவரத்திலி ருந்து ராமநாதபுரம், மதுரை, திருச்சி, கோவை, கன்னியாகுமரி, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் நாள்தோறும் 257 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், அரசுப் பேருந்து கட்டணம் சனிக்கிழமை முதல் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால், பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உயர்த்தப்பட்டுள்ள அரசுப் பேருந்து கட்டண விவரம் (பழைய கட்டணம் அடைப்புக் குறிக்குள்):
ராமேசுவரத்திலிருந்து ராமநாதபுரத்துக்கு ரூ.47-ரூ.50 (32), மதுரைக்கு ரூ. 145 முதல் ரூ.150 (ரூ.98), கோவைக்கு ரூ.328 ( ரூ.224), பட்டுக்கோட்டைக்கு ரூ.170 (ரூ.115), நாகைக்கு ரூ.240 (ரூ.165), திருச்செந்தூருக்கு ரூ.190 (ரூ.130), தூத்துக்குடிக்கு ரூ.151 (ரூ.105), திருச்சிக்கு ரூ.220 (ரூ.145), சென்னைக்கு பழைய கட்டணத்திலிருந்து ரூ. 200-க்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சனிக்கிழமை பேருந்து நிலையத்துக்கு வந்த பயணிகள் கட்டண உயர்வை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். இனிமேல், எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் குடும்பத்துடன் செல்ல முடியாத நிலைக்கு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
இதனால், ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர் என்றும், உயர்த்திய கட்டணத்தை திரும்பப் பெறவேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
பலர் ரயிலில் செல்ல முடிவெடுத்ததால், பேருந்து நிலையம் அதிகக் கூட்டமின்றி காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com