சவூதியில் இறந்த கமுதி விவசாயியின் உடலை  தமிழகத்துக்கு கொண்டு வர உறவினர்கள் கோரிக்கை

சவூதியில் இறந்த கமுதி விவசாயியின் உடலை தமிழகத்துக்கு கொண்டு வர உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சவூதியில் இறந்த கமுதி விவசாயியின் உடலை தமிழகத்துக்கு கொண்டு வர உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கொம்பூதி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி அரசு மகன் கோவிந்தன் (42), இவர் கடந்த 9 ஆண்டுகளாக சவூதி அரோபியாவில் உள்ள அல்ஜெத்தா நகரில் துப்புரவுப் பணியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை அங்கு நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்த கோவிந்தன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இறந்த கோவிந்தனுக்கு  மனைவி வழிவிட்டாள் மகன்கள் தமிழரசன், முத்துமுருகன், மலைச்செல்வம் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். 
தனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர தமிழக முதல்வர் பழனிசாமி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடராஜன் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆதரவின்றி வறுமையில் உள்ள தங்களது குடும்பத்திற்கு அரசு உரிய இழப்பீட்டுத் தொகையை சவூதி அரசிடம் இருந்து பெற்றுத்தர வேண்டும் என்றும் கோவிந்தனின் மனைவி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com