பரமக்குடி நகராட்சி அலுவலகத்தில், மாவட்ட குழந்தைகள் நலப் பாதுகாப்பு மையம் மற்றும் சுகாதாரத் துறை சார்பில் குழந்தை தொழிலாளர் தடை சட்டம், பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
இம்முகாமுக்கு, மாவட்டக் குழந்தைகள் நலக் குழுத் தலைவர் எஸ். சகுந்தலா தலைமை வகித்தார். மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சமூகப் பணியாளர் எஸ். மகேஸ்வரன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் பி. மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில், நகராட்சியில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு சைல்டு-லைன் 1098 மூலம், குழந்தைகள் திருமண தடை சட்டம், பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான சட்டம் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. இதில், 50-க்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக, குழந்தைகள் நல மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ் வரவேற்றார்.