ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் கிராம வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்யும் எம்.பி.க்கள் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனர்.
மத்திய அரசின் நிதியில் நடைபெறும் கிராம வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்யும் அதிமுக எம்.பி. வேணுகோபால் தலைமையிலான எம்.பிக்கள் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை ராமேசுவரம் வருகை தந்தனர்.
பின்னர் தனுஷ்கோடிக்கு சென்ற குழுவினர் அரிச்சல்முனை வரை சென்று பார்வையிட்டனர். இதனையடுத்து ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்த எம்.பி.க்கள் குழுவினர் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாளை வழிபட்டனர்.
அப்போது ராமேசுவரம் துணை தாசில்தார் அப்துல்ஜாபர், பாஜக மாவட்டத்தலைவர் கே.முரளிதரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.