ராமேசுவரம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மண்டபம் உதவி செயற் பொறியாளர் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில், ராமேசுவரம், மண்டபம் உப மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9.45 மணி முதல் மாலை 4.45 மணி வரை, ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம், மண்டபம் முகாம், வேதாளை, சுந்தரமுடையான் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.