ராமநாதபுரம் அருகேயுள்ள சித்தார்கோட்டையில் பாண்டியன் கிராம வங்கிக் கிளை திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் அருகே சித்தார்கோட்டை கிராமத்தில் செயல்பட்டு வந்த பாண்டியன் கிராம வங்கி விசாலமான புதிய கட்டடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.
இந்த கிளையை வங்கியின் தூத்துக்குடி மண்டல மேலாளர் கே.தெய்வநாயகம் குத்து விளக்கேற்றி திறந்து வைத்து வங்கியின் செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினார்.
சித்தார்கோட்டை ஜமாஅத் தலைவர் ஐ.அல்தாப் ஹூசேன் முன்னிலை வகித்தார். ராமநாதபுரம் பாண்டியன் கிராம வங்கியின் முதன்மை மேலாளர் பி.குசலவன் வரவேற்றுப் பேசினார். சித்தார்கோட்டை கிளை மேலாளர் ஏ.தசரதன் நன்றி கூறினார். வங்கியின் வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் பலரும் விழாவில் கலந்து கொண்டனர்.