பரமக்குடி அருகே சாலை விபத்தில் விவசாயி சாவு

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து விவசாயி உயிரிழந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து விவசாயி உயிரிழந்தார்.
பரமக்குடி ஒன்றியம் பாம்பூர் சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் சுரேஷ் (33). விவசாயியான இவர் செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனத்தில் அங்குள்ள அனல் மின் உற்பத்தி நிலையம் பகுதியில் உள்ள கடைக்குச் சென்று பொருள்கள் வங்கிக்கொண்டு வீட்டிற்கு திரும்பி வந்துகொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்து காயமடைந்தார். இதையடுத்து மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி அங்கு இறந்தார்.இதுகுறித்து பரமக்குடி தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com