முதுகுளத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் புதிய செயல் அலுவலர் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றார்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேரூராட்சியில் செயல் அலுவலராகப் பணியாற்றி வந்த செ. மாலதி, முதுகுளத்தூர் பேரூராட்சியில் புதிய செயல் அலுவலராக பொறுப்பேற்றுக்கொண்டார். ஏற்கெனவே, முதுகுளத்தூர் பேரூராட்சி செயல் அலுவலராகப் பணியாற்றிய ஆர். இளவரசி, பதவி உயர்வு பெற்று தனி அலுவலராக கமுதி பேரூராட்சியில் பணிபுரிந்து வருகிறார்.