முதுகுளத்தூரில் தனியார் பள்ளி மாணவி வெள்ளிக்கிழமை விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே எம்.சாலை கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி. இவர் தேரிருவேலியில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
மன அழுத்தத்தில் இருந்த மாணவி, பள்ளியின் மதிய உணவு இடைவேளை நேரத்தில் விஷம் குடித்தாக தன்னுடன் பயி லும் சக மாணவிகளிடம் கூறிவிட்டு வகுப்பறைக்குள் மயங்கி விழுந்துள்ளார். மயக்கமடைந்த நிலையில்
இருந்த அவரை, ஆசிரியர்கள் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்தனர். பின்னர் மாணவியின் பெற்றோர் மேல் சிகிச்சைகாக, அவரை ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.