தொண்டி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு இருசக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
திருவாடானை அருகே உள்ள நம்புதாளையைச் சேர்ந்த ராஜா மகன் முத்துராஜா(18). இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சோழியக்குடியில் இருந்து நம்புதாளைக்கு சென்றுள்ளார். கிழக்கு கடற்கரை சாலை கண்மாய்க் கரை குடியிருப்பு விலக்கு சாலையில் ராமநாதபுரம் நோக்கி வந்த சரக்கு வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் முத்துராஜா உயிரிழந்தார். தொண்டி போலீஸார் வழக்குப் பதிந்து சரக்கு வகான ஓட்டுநரான சூரங்கோட்டை சேர்ந்த இளங்கோவன் (39)என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.