ராமேசுவரத்தில் சர்வதேச கடலோர தூய்மை தினத்தையொட்டி கடற்கரையில் கழிவுகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணியில் இந்திய கடலோரகாவல்படை மற்றும் கடற்படையினர் சனிக்கிழமை ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை சர்வதேச கடலோர தூய்மை தினம் கடை பிடிக்கப்பட்டது. இந்திய கடலோரக் காவல்படை சார்பில் உச்சிப்புளி அருகே அரியமான் குஷி பீச் கடற்கரையில் தூய்மைப்படுத்தும் பணியை கமாண்டர் எம் வெங்கடேஷன் தொடங்கி வைத்தார். இதில் காவல்துறை துணைத்தலைவர் காமினி, மீன்வளத்துறை உதவி இயக்குநர் கோபிநாத் மற்றும் 100 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், இந்திய கடலோரகாவல்படை வீரர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று ராமேசுவரம் அக்னிதீர்த்தக் கரையில் இந்திய கடற்படையினர் மற்றும் மாணவ, மாணவிகள் தொண்டு நிறுவனங்களை சேர்ந்த 100 க்கும் மேற்பட்டவர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.